சரித்திர காலத்தில் நெல்லூர் பட்டணம் என்னும் பகுதியை ஆரவல்லி, சூரவல்லி, வீரவள்ளி ஆகியோரின் உடன் பிறந்தவர்களின் எழுவர் ஆட்சி செய்தனர். மந்திர வலிமையிலும் சூனிய வித்தைகளிலும் வல்லவர்களாய் இருந்த அந்தப் பெண்களை வெல்ல முடியாமல் பல மன்னர்கள் வீழ்ந்தனர். அக்காலத்தில் வடபுலத்தில் குருகுல மன்னவர்களான துரியோதனாதியரும், பாண்டவர்களும் தத்தம் நாடுகளை அரசாண்டு வந்தனர். சூது பொருந்திப் பாரதப் போர் மூள்வதற்கு முந்தைய காலம் அது. ஒரு நாள் ஐவரும் மற்றவர்களும் கொலு மண்டபத்திலிருந்த சமயம், கிருஷ்ண பகவான் வந்து, ஆரவல்லி முதலான பெண்களின் ஆட்சியையும் அவர்களின் வல்லமையையும் தீய நெறிகளையும் எடுத்துக் கூறி அவர்கள்மீது பஞ்ச பாண்டவர்களைப் படையெடுத்துச் சென்று வெற்றி கொள்ளுமாறு கூறினார். அப்பொழுது பீமன் தான் சென்று வெற்றிகொண்டு வருவதாகச்...